• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் துறைமுக அணுகுகை நிலமட்டத்திற்கு மேலான அதிவேக நெடுஞ்சாலைக் கருத்திட்டம் (SASEC) காரணமாக பாதிக்கப்படும் இலங்கைத் துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான கட்டடங்களுக்குப் பதிலாக பதினேழு மாடிகளைக் கொண்ட புதிய அலுவலகக் கட்டடமொன்றையும் நான்கு பட்டறைகளையும் நிருமாணித்தல்
- ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் துறைமுக அணுகுகை நிலமட்டத்திற்கு மேலான அதிவேக நெடுஞ்சாலைக் கருத்திட்டம் (SASEC) காரணமாக பாதிக்கப்படும் இலங்கைத் துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான கட்டடங்களையும் பட்டறைகளையும் மீள நிறுவுவதற்காக பதினேழு மாடிகளைக் கொண்ட புதிய அலுவலகக் கட்டடமொன்றையும் நான்கு பட்டறைகளையும் நிருமாணிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.