• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தை நிருமாணிப்பதற்காக காணியை இலங்கை பொலிசுக்காக சுவீகரித்தல்
- தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைக் கட்டிடமொன்றில் நடாத்திச் செல்லப்படும் புளத்சிங்கள பொலிஸ் நிலையத்திற்கு நிரந்தர கட்டடமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு புளத்சிங்கள கிராம உத்தியோகத்தர் பிரிவின் அத்துர என்னும் கிராமத்தில் அமைந்துள்ள ஹொரண பெருந்தோட்ட கம்பனிக்குச் சொந்தமான சுமார் 04 ஏக்கர் காணித்துண்டொன்றை இலங்கை பொலிசுக்கு உடைமையாக்கும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.