• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிலாபம் நகரசபை, சிலாபம் பிரதேச சபை மற்றும் ஆரச்சிக்கட்டுவ பிரதேச சபை ஆகியவற்றினால் செயற்படுத்தப்படும் கூட்டு திண்ம கழிவு முகாமைத்துவ கருத்திட்டமொன்றுக்காக காணித்துண்டொன்றை விடு வித்தல்
- சிலாபம் நகரசபை அதிகார பிரதேசத்தில் நாளாந்தம் 18 - 20 மெட்ரிக் தொன் திண்மக்கழிவுகள் சேர்வதோடு சிலாபம் மற்றும் ஆரச்சிக்கட்டுவ பிரதேச சபை அதிகார பிரதேசங்களில் நாளாந்தம் சேரும் திண்மக்கழிவுகளின் அளவானது முறையே சுமார் 06 மெட்ரிக் தொன்களும் 05 மெட்ரிக் தொன்களும் ஆகும். இந்த திண்மக்கழிவுகளாவன விஞ்ஞான ரீதியில் திட்டமிடப்படாத இடங்களில் போடப்படுவதோடு, இதன் காரணமாக சுற்றாடல் மற்றும் சமூக பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதற்கமைவாக இந்த உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகார பிரதேசங்கள் மூன்றிலும் ஒன்றுசேரும் உக்காத கழிவுகளை முகாமிப்பதற்காக கூட்டு திண்மக்கழிவு முகாமைத்துவ கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபையினால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்குச் சொந்தமான ஆரச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவின் கருக்குளிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் மானாவேரிய வத்த என்னும் பிரதேசத்திலுள்ள 05 ஏக்கர் காணித்துண்டொன்றை 30 வருடகால குத்தகை அடிப்படையில் சிலாபம் நகரசபைக்கு உடமையாக்கும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.