• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உலக தபால்தின விழா 2017 - பொலன்நறுவை
- 2017 ஒக்றோபர் மாதம் 09 ஆம் திகதியன்றில் வரும் 143 ஆவது உலக தபால் தின ஞாபகார்த்த விழாவை வடமத்திய மாகாணத்தை மையப்படுத்தி நடாத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உலக தபால் தின ஞாபகார்த்த விழாவை அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமையில் 2017 ஒக்றோபர் மாதம் 09 ஆம் திகதியன்று பொலன்நறுவையில் நடாத்துவதற்கும் அதற்கு ஒருங்கிணைவாக பொலன்நறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் 34 தபால் மற்றும் உபதபால் அலுவலகங்களை நவீன வசதிகளுடன் கூடியதாக திருத்துவதற்கும் தபால் திணைக்களத்தின் ஊழியர்கள் அனைவரினதும் பங்களிப்பில் இரத்த தான நிகழ்ச்சி உட்பட சமூக சேவை திட்டங்களை பிரதேச மட்டத்தில் நடாத்துவதற்கும் சுமார் 25,000 தபால் ஊழியர்களின் செயற்திறன் மதிப்பிடல் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமைப் பற்றி அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.