2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு அத்தியாவசியமான நலன்புரி மற்றும் வாழ்வாதார அபிவிருத்திக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் - நடப்பாண்டில் ஏற்பட்ட திடீர் வௌ்ளப்பெருக்கு நிலைமை மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் அத்தியாவசியமான நிவாரண சேவைகளை வழங்கும் பொருட்டு 75 மில்லியன் ரூபா நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களினதும் சிறுவர்களினதும் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக ஏற்கனவே பல்வேறுபட்ட அரசாங்க நிறுவனங்கள், அரச சார்பற்ற அமைப்புகள், தனியார் துறை என்பன நிவாரணங்களை வழங்கியுள்ளன. வருமான வழிகள் இல்லாமல் போயுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் இந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் எதிர்கால நலனோம்பல் பணிகளை ஏற்பாடு செய்யும் நோக்கிலும் இந்த நிதியை பயன்படுத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக்கொண்டு வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களின் நலனோம்பல் சார்பில் தொடர்ச்சியாக நிதி உதவி வழங்கும் பொருட்டு நிலையான பொறிமுறையொன்றையும் ஒழுங்குமுறை யொன்றையும் தயாரிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |