• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் செம்மறி ஆடு வளர்ப்புக் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு தேசிய கால்நடைவளர்ப்பு அபிவிருத்தி சபைக்கு செம்மறி ஆடுகளை இறக்குமதி செய்தல்
- இலங்கையில் செம்மறி ஆடு வளர்ப்பு பிரதானமாக தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபையின் பண்ணைகளிலும் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள தனியார் பண்ணைகளிலும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பண்ணைகளில் தற்போதுள்ள விலங்குகள் இனத்தக பாலிணைவு முறை காரணமாக உரிய தரத்திற்கு அவை விருத்தியடையாமையினால் உயர்வகை இனப்பெருக்க செம்மறி ஆடுகளின் தேவை எழுந்துள்ளது. 1980 ஆம் ஆண்டின் ஆரம்பத்தின் பின்னர் இலங்கையில் செம்மறி ஆடுகளுக்கான புதிய இனங்கள் அறிமுகப்படுத்தப்படவில்லை.

இதற்கமைவாக, முறையான கொள்வனவு செயற்பாட்டினைப் பின்பற்றி இனப்பெருக்கத்திற்குப் பொருத்தமான 25 கடா செம்மறி ஆடுகளையும் 100 மறி செம்மறி ஆடுகளையும் இறக்குமதி செய்வதற்கும் அதற்காக 2017 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள 10 மில்லியன் ரூபாவை பயன்டுத்துவதற்குமாக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சர வையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.