• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொப்பரா தேங்காய் தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையொன்றை வழங்குதல்
- தேங்காய் உள்ளீடு சார்ந்த உற்பத்தி ஏற்றுமதி கைத்தொழிலில் உயர் அந்நியசெலாவணியை ஈட்டுவது உலர்ந்த தேங்காய் கைத்தொழிலிருந்தாகும். 2017 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே நிலவும் வரட்சியின் காரணமாக தேங்காய் அறுவடை குறைவடைந்துள்ளதன் காரணமாகவும் உள்நாட்டு சந்தையில் தேங்காய் விலை அதிகரித்துள்ளதன் காரணமாகவும் 2016 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது 2017 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் உலர்ந்த தேங்காய் உற்பத்தியின் ஏற்றுமதியானது 25 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது. உள்நாட்டு சந்தையில் தேங்காய் விலை அதிகரிப்பிற்கு சமமாக உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதன் காரணமாக உலர்ந்த தேங்காய் கைத்தொழிலாளர்கள் கடும் பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளதோடு, தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தெங்கு ஆலை அபிவிருத்தி நிதியத்திலிருந்து 50 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தி இந்த கைத்தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.