• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மன்னார் மாவட்டத்தில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு கைத்தொழிற் பேட்டையொன்றை நிருமாணிப்பது சம்பந்தமாக சுற்றாடல் பாதிப்பு பற்றிய சாத்தியத்தகவாய்வொன்றை செய்தல்
- நாட்டின் மீன் உற்பத்தியை அதிகரித்து அதன்மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கும் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் மன்னார் மாவட்டத்தின் விடத்தல் தீவு சரணாலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள 1,491 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய நிலப்பிரதேசத்தில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு கைத்தொழிற் பேட்டையொன்றை தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பையும் பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் சிபாரிசையும் கவனத்திற்கு எடுத்துக்கொண்ட அமைச்சரவையானது முதலில் உத்தேச கருத்திட்டத்திற்காக இனங் காணப்பட்டுள்ள காணியின் ஏற்ற தன்மை சம்பந்தமாகவும் கருத்திட்டத்தின் சூழல் பாதிப்பு சம்பந்தமாகவும் மதிப்பீடொன்றை செய்யுமாறு உரிய அதிகாரபீடங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.