2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இரத்தினபுரி, புதிய நகரத்தில் அமைந்துள்ள "ருவன்புர" நகர சிறுவர் பூங்காவை இறையிலிக் கொடையொன்றான இரத்தினபுரி மாநகர சபைக்கு உடைமையாக்குதல் - இரத்தினபுரி புதிய நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்காக சுவீகரிக்கப்பட்டுள்ள காணியிலிருந்து ஏக்கர் 01 றூட் 01 பேர்ச்சர்ஸ் 16.30 விஸ்தீரணமுடைய காணித்துண்டில் இந்த அதிகாரசபையினால் நிருமாணிக்கப்பட்டுள்ள "ருவன்புர நகர சிறுவர் பூங்காவை" பராமரித்து பேணுவதற்காக இறையிலிக் கொடையொன்றாக இரத்தினபுரி மாநகர சபைக்கு உடைமையாக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |