2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகக் கட்டடத்தை நிருமாணித்தல் - தற்போது பம்பலபிட்டிய பிரதேசத்தில் வாடகைக்கு எடுத்த கட்டடமொன்றில் நடாத்திச் செல்லப்படும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகத்திற்கு பொருத்தமான கட்டடமொன்றை நிருமாணிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. மொறட்டுவை பிரதேசத்தில் ஒரு (01) ஏக்கர் விஸ்தீரணமுடைய காணித்துண்டொன்று இதற்காக சுவீகரிக்கப்பட்டுள்ளதோடு, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஆள்வலு பங்களிப்புடன் இந்த திணைக்களத்திற்கான தலைமையகக் கட்டடத்தை நிருமாணிப்பதற்கு 42 மில்லியன் ரூபாவைக் கொண்ட திறைசேரி நிதி ஏற்பாட்டினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |