• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களுத்துறை பொது வைத்தியசாலையின் நிருவாக கட்டடத்தின் நிருமாணிப்பு (கட்டம் II)
- களுத்துறை பொது வைத்தியசாலை மேல் மாகாணத்தின் பிரதான வைத்தியசாலையொன்றாக விருத்தி செய்வதற்கு அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த வைத்தியசாலையின் நிருவாக பணிகளை நடைமுறைப்படுத்தும் கட்டடத்தில் தற்போது நிலவும் குறைந்த இடவசதிக்கு மாற்றுவழியாக இந்தக் கட்டடத்தின் II ஆம் கட்டத்தை நிருமாணிக்கும் பணிகளை ஆரம்பிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவுசெய்யும் பொருட்டு தேசிய ரீதியில் போட்டிக் கேள்வி கோரப்பட்டதோடு, இதன் சார்பில் 05 கேள்விதாரர்கள் முன்வந்துள்ளார்கள்.

இந்த கேள்விகளை மதிப்பிட்ட தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவினதும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் சிபாரிசின் பிரகாரம் ஆகக்குறைந்த அனுசரணையான விலைமுன்வைப்பைச் செய்துள்ள அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு உரிய ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.