• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலன்நறுவை புதிய தபால் கட்டடத் தொகுதியை நிருமாணிப்பதற்குத் தேவையான காணிகளை முறையாக தபால் திணைக்களத்திற்கு உடைமையாக்கி கொள்ளல்
- “பொலன்நறுவையை எழுச்சிபெறச் செய்வோம்“ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உத்தேச புதிய நகர அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக பொலன்நறுவை புனித நகரத்தில் அஞ்சல் அலுவலகம், அஞ்சல் அலுவலக உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பொலன்நறுவை பிராந்திய தபால் அத்தியட்சகர் அலுவலகம் என்பவற்றுடனான காணி நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடமையாக்கிக் கொள்ளப்படவுள்ளதோடு, தபால் திணைக்களத்திற்கு இல்லாமற்போகும் காணி மற்றும் கட்டடங்கள் சார்பில் கந்துருவெல நகரத்தில் (தற்போது பொலன்நறுவை பழைய பிரதான தபால் அலுவலகம் அமைந்துள்ள காணி) தபால் கட்டடத் தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளமையினால் அதற்குத் தேவையான காணியை தபால் திணைக்களத்திற்கு உடமையாக்கிக் கொள்ளும் பொருட்டு அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.