• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கலேவெலயிலுள்ள காணித் துண்டொன்றை கலேவெல பொலிஸ் நிலையத்தைத் தாபிப்பதற்காக வழங்குதல்
- பாரிய தம்புள்ளை அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் சுவீகரிக்கப்பட்டுள்ள, கலேவெலயிலுள்ள 24 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியிலிருந்து சுமார் 1 1/2 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணித் துண்டொன்றை கலேவெல பொலிஸ் நிலையத்தைத் தாபிப்பதற்காக இலங்கை பொலிசுக்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.