2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தமாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அறியச் செய்வித்தல் - அனர்த்த முகாமைத்துவம் என்பது நிறுவனமொன்றுக்கோ அல்லது அமைப்பொன்றுக்கோ உரிய பணியொன்று அல்லாததோடு, அரசாங்க மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் அடங்கலாக பொதுமக்களின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ளவேண்டிய பணியாகும். இதற்கமைவாக அரசாங்க மற்றும் அரசாங்க சார்பற்ற நிறுவனங்களில் சேவையாற்றும் அனர்த்த முகாமைத்துவ துறை தொடர்பில் தேர்ச்சி மிக்க வளவாளர்களின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொண்டு மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை சமூகத்தினர், தொழில்முயற்சி யாளர்கள் சார்பில் அனர்த்த நிலைமைகளை குறைப்பது சம்பந்தமாக அறியச் செய்விக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |