2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வினைத்திறன் மிக்கதும் ஒழுக்கநெறிகளை கொண்டதுமான அரசாங்க சேவைக்கான சூழலை உருவாக்குதல் - தற்போது நிலவும் போட்டிகரமான, துரிதமாக மாற்றமடைந்துவரும், உட்சிக்கல் வாய்ந்த சவால்களுக்கு முகங்கொடுக்கும் பொருட்டு நல்லாட்சி மூலதத்துவங்கள், பிரசைகளை மையப்படுத்திய சேவை, உயர்தரம் வாய்ந்த சேவை, முடிவுகளுக்கு பொறுப்புக்கூறும் முகாமைத்துவம் போன்ற அம்சங்களைக் கொண்ட புதிய அரசாங்க சேவைசார்ந்த சூழலொன்றை உருவாக்கவேண்டியுள்ளது. இதற்கு அமைவாக இலங்கை மனிதவளங்கள் அபிவிருத்திக்கான தேசிய சபையினால் இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனம், முகாமைத்துவ சேவைகள் திணைக்களம், பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு , அரசாங்க சேவைகள் ஆணைக்குழு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவபீடம் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையில் அரசாங்க துறைசார்ந்த ஊழியர்கள் சார்பில் பிரேரிக்கப்பட்டுள்ள பொது திறன் கட்டமைப்பொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |