2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைத்தல் சம்பந்தமான உடன்படிக்கை - குற்றவியல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் வினைத்திறன் மிக்க ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் இலங்கை சனநாயக சோசலிச குடியரசிற்கும் வியட்நாம் சோசலிச குடியரசிற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டுள்ள வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைத்தல் சம்பந்தமான உடன்படிக்கையானது பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அமைச்சரவையினால் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது |