2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிபாரிசுகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சர்கள் குழுவொன்றைத் தாபித்தல் - 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத்தில் இலங்கை உடன்பாடு தெரிவித்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மேலும் இரண்டு (02) வருட காலத்தைப் பெற்றுக் கொள்வதற்கு 2017 மார்ச் மாதத்தில் நடாத்தப்பட்ட கூட்டத்தொடரில் இலங்கை வெற்றி கண்டது. இதற்காக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமிருந்தும் ஏனைய உறுப்பு நாடுகளிடமிருந்தும் தேவையான தொழினுட்ப உதவிகளையும் ஏனைய உதவிகளையும் பெற்றுக் கொள்வதற்கும் இதற்காக செயலாற்றும் பல்வேறுபட்ட அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கும் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக வழிமுறையொன்றை தயாரிக்கும் நோக்கில் மாண்புமிகு பிரதம அமைச்சரின் தலைமையில் உரிய ஏனைய அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கும் இந்த குழுவிற்கு ஒத்துழைப்பு நல்கும் பொருட்டு உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கும் முன்மொழிந்து பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |