2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அதி வணக்கத்திற்குரிய மாதுளுவாவே சோபித்த நாஹிமிகம கருத்திட்டத்தின் சார்பில் இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல் - காலஞ்சென்ற அதி வணக்கத்திற்குரிய மாதுளுவாவே சோபித்த தேரோ அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட அநுராதபுரம் மாவட்டத்தின் எலபத்கம அபிவிருத்திக்கான கருத்திட்டமொன்று மாண்புமிகு சபாநாயகரின் ஆலோசனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, அதற்காக 296.50 மில்லியன் ரூபாவைக் கொண்ட மானியமொன்றை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குறித்த கிராமத்தில் வசிக்கும் 153 குடும்பங்களுக்கு வீடுகளை நிருமாணித்தல், பல்பணி கட்டடமொன்றை நிருமாணித்தல், பிக்குமார்களுக்கான தங்குமிடம் உட்பட தானசாலையொன்றை நிருமாணித்தல், நூலகத்தை நவீனமயப்படுத்தல், நீர் வழங்கல், கிராமிய குளமொன்றை நிருமாணித்தல் போன்ற அபிவிருத்தி நோக்கங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. உரிய கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |