2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான அரசாங்க காணிகளை பராதீனப்படுத்துவதற்கான வழிமுறையினை ஒழுங்குறுத்துதல் - அரசாங்க நிறுவனங்களினால் நிறைவேற்றப்படும் நிருவாக மற்றும் அபிவிருத்தி நோக்கங்களுக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள காணிகளை வேறுதரப்பொன்றுக்கு பராதீனப்படுத்த முடியுமாவது உரிய நிறுவனம் தாபிக்கப்பட்டுள்ள சட்டத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தலொழிய அல்லது அதிமேதகைய சனாதிபதியினால் அதற்காக அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தால் மாத்திரமாகும். அரசாங்கத்திற்குச் சொந்தமான குறைவாகப் பயன்படுத்தும் காணிகளை பல்வேறுபட்ட அபிவிருத்தி நோக்கங்களுக்காக தனியார்துறையினருக்கு வழங்குமாறு முன்வைக்கப்படும் கோரிக்கைகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும்போது மிகச்சிறந்த வழிமுறையொன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் அத்தகைய கோரிக்கைகள் சம்பந்தமாக பரிசீலனை செய்து அதிமேதகைய சனாதிபதி அவர்களுக்கு சிபாரிசுகளைச் சமர்ப்பிக்கும் பொருட்டு சனாதிபதியின் செயலாளரின் தலைமையில் உரிய வரிசை அமைச்சுக்களின் செயலாளர்களையும் உத்தியோகத்தர்களையும் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு முன்மொழிந்து அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |