2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சனநாயக மறுசீரமைப்பு மற்றும் சமூக ஒருங்கிணைப்பிற்காக பங்குபற்றுதலினை பலப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக ஐக்கிய அமெரிக்க குடியரசுடன் செய்துகொள்ளப்பட்ட ஒத்துழைப்பு உடன்படிக்கையைத் திருத்துதல் - "சனநாயக மறுசீரமைப்பு மற்றும் சமூக ஒருங்கிணைப்பிற்காக பங்குபற்றுதலினை பலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்" சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க குடியரசு முகவராண்மையுடன் இணைந்து தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2016 ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக வழங்குவதற்கு உடன்பட்ட 22.70 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட பங்களிப்புத் தொகையை மேலும் சுமார் 3.6 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களால் அதிகரித்து மொத்த உதவித் தொகையை 26.30 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள்வரை திருத்தியமைத்து உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |