2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
திருகோணமலை மாவட்டத்தில் பல்கலைக்கழக கல்லூரியொன்றைத் தாபித்தல் - திருகோணமலை மாவட்டத்தில் தற்போது அரசாங்க துறைசார்ந்த 13 தொழிற்பயிற்சி நிலையங்கள் செயற்படுவதோடு, பல்வேறு துறைகளுக்குரிய 54 பாடநெறிகள் இவற்றில் நடாத்திச் செல்லப்படுகின்றன. தனியார்துறையினால் நடாத்திச் செல்லப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சுமார் 24 பாடநெறிகள் நடாத்தப்படுகின்றன. அரசாங்க துறைசார்ந்த பயிற்சி நிலையங்களில் 2016 ஆம் ஆண்டிலே சுமார் 2,200 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இந்த பயிற்சி நிலையங்களில் தற்போது தேசிய தொழிற்தகைமை 3 ஆம் 4 ஆம் மட்ட பாடநெறிகள் மட்டும் நடாத்தப்படுவதோடு, தேசிய தொழிற்தகைமை 5 ஆம் 6 ஆம் மட்ட பாடநெறிகளை கற்பதற்கு அநுராதபுரத்தில் அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக்கழக கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இந்த நிலைமையின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் பல்கலைக்கழக கல்லூரியொன்றை தாபிப்பது அத்தியாவசியமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 434 மில்லியன் ரூபாவைக் கொண்ட ஆகுசெலவில் திருகோணமலை மாவட்டத்தின் கின்னியாவில் பல்கலைக்கழக கல்லூரியொன்றைத் தாபிக்கும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|