• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச நிதிக் கூட்டுத்தாபனத்தினால் வௌிநாட்டு இலங்கை ரூபா முறிகள் நிகழ்ச்சித் திட்டத்தை தாபிப்பதற்கான பிரேரிப்பு
- இலங்கை ரூபா முறிகளை சர்வதேச ரீதியில் வழங்குவதற்கும் இதன்மூலம் கிடைக்கப்பெறும் நிதியினை இலங்கையில் அவர்கள் செயற்படுத்தும் கருத்திட்டங்களுக்காக பயன்படுத்துவதற்கும் உலக வங்கி தொடர்புபட்ட சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனத்தினால் பிரேரிப்பொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கை பொருளாதாரத்தின் நம்பகத்தன்மை தொடர்பிலான செய்தியை வழங்குதல், காலப்போக்கில் புதிய வௌிநாட்டு முதலீடுகள் நாட்டினுள் வருதலை அதிகரித்தல், இலங்கை முறிகளை வழங்குபவர்கள் சார்பில் மாற்று நிதிதோற்றுவாய்களை உருவாக்குதல், இலங்கைக்கு அமெரிக்க டொலர்களைக் கூடுதலாகக் கவர்ந்திழுத்தல் போன்ற நன்மைகள் இந்த நாட்டுக்குக் கிடைக்கப்பெறும்.

பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவில் இது சம்பந்தமாக பரிசீலனை செய்யப்பட்டுள்ளதோடு, உரிய பிரேரிப்பை நடைமுறைப் படுத்துவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இலங்கை மத்திய வங்கியினதும் ஏனைய உரிய நிறுவனங்களினதும் அங்கீகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு உட்பட்டு, இந்த பிரேரிப்பை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.