2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வருடாந்த பேரூந்து கட்டணத்தை திருத்துதல் - 2017 - பேரூந்து சங்கங்கள் அடங்கலாக உரிய தரப்பினர்களுடன் உசாவுதலைச் செய்து பேரூந்துக் கட்டணத்தை திருத்தும் அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியினால் வௌிப்படுத்தப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டும் பேரூந்துகளின் இயக்க செலவுக்குரியதாக நிகழ்ந்துள்ள மாற்றங்களைக் கவனத்திற்கொண்டும் 2017 ஆம் ஆண்டிற்கான பேரூந்துக் கட்டண திருத்தப் பிரேரிப்புக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் செய்யப்பட்டுள்ள பிரேரிப்பைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, 2017 யூலை 01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக நடைமுறையிலுள்ள பேரூந்துக் கட்டணத்தை 6.28 சதவீதத்தால் அதிகரிப்பதற்கும் தற்போது 09 ரூபாவாகவுள்ள ஆகக்குறைந்த பேரூந்துக் கட்டணத்தை 10 ரூபாவாகத் திருத்துவதற்கும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |