• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 மே மாதம் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்த நிலைமைகள் காரணமாக வீடுகளை இழந்த அத்துடன் குடியிருந்த வீடுகளிலிருந்து வௌியேற வேண்டியேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவொன்றை வழங்குதல்
- கடந்த மே மாத இறுதியில் ஏற்பட்ட வௌ்ளம், நிலச்சரிவு மற்றும் புயல் காற்று என்பன காரணமாக பெருமளவானோர் பாதிக்கப்பட்டதோடு, அதன் போது 3,037 வீடுகள் முழுமையாகவும் 25,647 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன. இவ்வாறு முழுமையாக அல்லது குடியிருப்பதற்கு பொருத்தமற்ற விதத்தில் வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கும் மற்றும் நிலச்சரிவு அவதானம் காரணமாக குடியிருந்த வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கும் தற்போது நலன்புரி நிலையங்களில் தங்குமிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைவாக இந்த குடும்பங்களுக்கு தற்காலிக வாடகை வீடுகளில் குடியிருப்பதற்கு இயலுமாகும் வகையில் குடும்பமொன்றுக்கு ஒரு மாதத்திற்கு 7,500 ரூபா வீதமான கொடுப்பனவொன்றை 2017 யூன், யூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்களுக்காக வழங்கும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.