2017-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்திற்கான யப்பானிய நன்கொடை உதவி - அரசாங்க துறையின் நிறைவேற்று தரங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு யப்பானில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகங்களில் பட்டப்பின் படிப்பு பாடநெறிகளை கற்பதற்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில், “மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்திற்கான யப்பானிய நன்கொடை நிகழ்ச்சித்திட்டம்" யப்பான் அரசாங்கத்தினால் 2010 ஆம் ஆண்டில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டில் முடிவடையவுள்ள இந்த நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் நான்கு வருட காலத்திற்கு நடைமுறைப்படுத்துவதற்கு யப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அண்ணளவாக 358 மில்லியன் ரூபாவை மானியமாக பெற்றுக் கொள்வதற்கு யப்பான் அரசாங்கத்துடன் பரிமாற்றல் கடிதங்களை கைச்சாத்திடும் அத்துடன் யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் உரிய பிரதான உடன்படிக்கைகள் இரண்டினை கைச்சாத்திடும் அதிகாரம் திறைசேரியின் செயலாளருக்கு கையளிக்கும் பொருட்டு பதில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் நிரோஷன் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |