• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத ரீதியிலான நல்லிணக்கம் சார்பில் மாவட்ட மட்டத்தில் குழுக்களை தாபித்தல்
- தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், சகவாழ்வு, நிலையான சமாதானம் என்பனவற்றை ஏற்படுத்தும் பொருட்டு பொருத்தமான பொறிமுறையொன்றை நாடு முழுவதும் உருவாக்கும் தேவை எழுந்துள்ளது. இதற்கமைவாக மதத் தலைவர்களினதும், இப்பிரதேசத்தின் பொலிஸ் அத்தியட்சகரினதும், தெரிவு செய்யப்படும் பிற பொருத்தமானவர்களின் பிரதிநிதித்துவத்துடன் மாவட்ட செயலாளர் கூட்ட அழைப்பாளராக செயலாற்றும் மாவட்ட மட்டத்திலான நல்லிணக்கக் குழுக்களைத் தாபிப்பதற்கும் மத மற்றும் இன ரீதியிலான பிரச்சினைகளை சமாதானமாக தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரத்தை இந்த குழுக்குளுக்கு கையளிப்பதற்கும் மாவட்ட மட்டத்திலான குழுக்களுக்கு மேலதிகமாக தேசிய மட்ட நல்லிணக்க குழுவொன்றை தாபிப்பதற்குமாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.