2017-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வீடமைப்பு மற்றும் மனித குடியிருப்பு அபிவிருத்திக்காக காணிகளுக்கு பிரவேசித்தல் - பூமியானது வரையறுக்கப்பட்ட வளமொன்றாகையினால் சிக்கனமாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்துதல் வேண்டும். கமத்தொழில் சாராத நோக்கமொன்றிற்காக வயற்காணிகளின் பாவனையை தடை செய்து தற்போது விதிக்கப்பட்டுள்ள பல்வேறுப்பட்ட வரையறைகள் காரணமாக விசேடமாக துரிதமாக நகரமயமாகிவரும் பிரதேசங்களில் மனித குடியிருப்பு அபிவிருத்தியின்பால் பிரதிகூலமான தாக்கத்தை செலுத்தியுள்ளது. இதற்கமைவாக கைவிடப்பட்ட அல்லது பயிர் செய்ய முடியாத வயற் காணிகளை நகர அபிவிருத்தி திட்டங்களுக்கு ஏற்றவாறும் சுற்றாடல் பிரச்சினைகள் உருவாகாதவாறும் குடியேற்றங்களுக்காக பயன்படுத்தும் தேவை எழுந்துள்ளது. இது சம்பந்தமாக வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சுற்றாடல் பாதுகாப்பிற்குரிய முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதோடு கைவிடப்பட்ட அல்லது பயிர் செய்ய முடியாத வயற்காணிகள் போன்ற குறைவாக பயன்படுத்தும் காணித் துண்டுகளை வீடுகள் நிருமாணிக்கும் பணிகளுக்காக வழங்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறையினை தீர்மானிக்கும் பொருட்டு உரிய அமைச்சுக்களினதும் ஏனைய அரசாங்க நிறுவனங்களினதும் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப் பட்டது. |