2017-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலுள்ள மாதிரி கிராமங்களுக்கும் எழுச்சி கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குதல் - வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சினால் செயற்படுத்தப்படும் மாதிரிக் கிராமங்கள் மற்றும் எழுச்சிக் கிராமங்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் இலங்கையில் சகல மாவட்டங்களிலும் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றதோடு, இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வீடுகளை வழங்கும் போது காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுள்ள குடும்பங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுகின்றது. இந்த வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் சில பிரதேசங்களில் சுத்தமான குடிநீர் விநியோகம் இல்லாமையினாலும் நடைமுறையிலுள்ள நீர்வழங்கல் நிகழ்ச்சித்திட்டங்கள் போதுமானதாக இல்லாமையினலும் காரணமாக பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதற்கமைவாக, காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களில் செயற்படுத்தப்படும் வீடமைப்புக் கருத்திட்டங்களுக்குத் தேவையான குடிநீர் விநியோகத்தை தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையுடனும் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்துடனும் இணைந்து துரிதமாக வழங்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |