2017-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
குற்றவியல் விடயங்களில் பரஸ்பர சட்டமுறையான ஒத்துழைப்பு தெரிவித்தல் தொடர்பாக சுவிற்சலாந்திற்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளும் புரிந்துணர்வு உடன்படிக்கை - விசாரணைகளை நடாத்துதல், வழக்குத் தொடுத்தல், குற்றங்களைத் தடுத்தல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளின் மூலம் ஈட்டும் பணத்தை அரசுடைமையாக்குதல் போன்ற விடயங்களில் இரு நாடுகளிலும் நடைமுறையி லுள்ள சட்டங்களை வலுவாக்கம் செய்யும் நோக்கில் இலங்கைக்கும் சுவிற்சலாந்துக்கும் இடையில் குற்றவியல் விடயங்களில் பரஸ்பர சட்டமுறையான ஒத்துழைப்பு தெரிவித்தல் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கும் அதன் பின்னர் இந்த உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கம் அளிப்பதற்குமாக நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |