2017-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இரண்டு மாடி ஆய்வுகூட கட்டடமொன்றை நிருமாணித்தல் - இலங்கையில் தெங்குத் தொழிலின் அபிவிருத்திக்கு முனைப்புடன் பங்களிப்பு நல்குவதற்கு இயலுமாகும் வகையில் இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுகூட வசதிகளை சர்வதேச தரங்களுக்கு அமைவாக விருத்தி செய்யும் தேவை எழுந்துள்ளது. இதற்கமைவாக, இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நவீன தொழினுட்பத்துடன் கூடிய ஆய்வுகூடமொன்றைத் தாபிக்கும் பொருட்டு இரண்டு (02) மாடிக் கட்டடமொன்றை 47 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நிருமாணிப்பதற்கும் இதில் 23 மில்லியன் ரூபாவை திரட்டிய நிதியத்திலிருந்தும் மீதி 24 மில்லியன் ரூபாவை இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் வருவாய்களிலிருந்து ஏற்பதற்குமாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |