2017-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இரசம் தொடர்பான மினமாட்டா இணக்கப்பாட்டிற்கு செயல்வலுவாக்கம் அளித்தல் - இரசம் மூலம் ஏற்படும் பிரதிகூலமான தாக்கங்களை உலகளாவிய ரீதியில் குறைப்பதற்கான சமவாயத்தில் இலங்கை உட்பட 128 நாடுகள் இதுவரை கைச்சாத்திட்டுள்ளதோடு, 53 நாடுகளினால் இந்த சமவாயத்திற்கு செயல்வலுவாக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சமவாயத்தை செயல்வலுவாக்கம் செய்வதன் மூலம் சமவாயத்தின் ஒரு தரப்பாக உரிய கூட்டங்களில் முறையாக பிரதிநிதித்துவப்படுத்தி சமவாய செயலகத்திற்கு விடயங்களை முன்வைப்பதற்கும் உலக சுற்றாடல் பிரச்சினைகளின் பால் உணர்வுபூர்வமாக சகல நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயலாற்றுவதற்கும் இலங்கைக்கு வாய்ப்பு கிடைக்கப் பெறும். இதற்கமைவாக இரசம் தொடர்பான மினமாட்டா இணக்கப்பாட்டிற்கு இலங்கையினால் செயல்வலுவாக்கம் அளிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |