2017-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புதுடில்லி நகரத்தில் இலங்கை கலாசார நிலையமொன்றைத் தாபித்தல் - இலங்கை நாட்டினுள்ளேயே உருவான பல்வேறுபட்ட கலாசார அங்கங்களை முழுநிறைவாக கொண்டுள்ள தனிச்சிறப்பு வாய்த நாடொன்றாகும். இலங்கையின் நடன சம்பிரதாய முறைகள், இலங்கை இசை, இலங்கையில் மரபுவழியான கலைகள் மற்றும் கைப்பணிகள் அடங்கலாக இலங்கைக்கு உரியதான விசேடமான கலாசார அடையாளத்தை மேம்படுத்தும் நிலையமொன்றாக பயன்படுத்தும் அத்துடன் பல்வேறுபட்ட கலாசார விழாக்களை நடாத்தும் நோக்கிலும் "இலங்கை கலாசார நிலையமொன்று" புதுடில்லி நகரத்தில் தாபிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு போதுமான காணித் துண்டொன்றை பெற்றுக் கொள்வதற்கு இந்திய அரசாங்கத்தின் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |