• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதுடில்லி நகரத்தில் பௌத்த தூபியொன்றைத் தாபித்தல்
- புதுடில்லி நகரத்தில் தற்போது தாபிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையானது மகாபோதி நிறுவனத்தினால் நிருவகிக்கப்பட்டு வருகின்றதோடு, இந்த விகாரை வரையறுக்கப்பட்ட பிரதேசத்தினுள் அமைந்துள்ளது. அதேபோன்று இலங்கையிலிருந்து அல்லது ஏனைய பௌத்த நாடுகளிலிருந்து புதுடில்லிக்கு வருகைதரும் பக்தர்களுக்கு வழிபடுவதற்காக தூபியொன்றோ அல்லது போதுமான வசதிகளோ இந்த விகாரையில் இல்லை. இதற்கமைவாக புதுடில்லி நரகத்தில் பௌத்த தூபியொன்றை நிருமாணிப்பதற்கு போதுமான காணியொன்றை பெற்றுக் கொள்வதற்கு இந்திய அரசாங்கத்தின் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.