2017-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழி கற்பித்தல் பிரிவொன்றைத் தாபித்தல் - சிங்களமொழி, இலக்கியம் மற்றும் இலங்கை கலாசாரம் பற்றி கற்பதற்கு விரும்பும் இந்தியா, சார்க் வலய நாடுகள் உட்பட ஏனைய வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பு வழங்கும் நோக்கில் இந்தியாவின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மொழி, இலக்கியம் மற்றும் கலாசார கற்கைப் பிரிவில் சிங்களமொழி கற்பிக்கும் பிரிவொன்றைத் தாபிப்பதற்காக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |