• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடற்றொழில் மற்றும் நீரகவளமூல திணைக்களத்திற்கு இடவசதிகளை பெற்றுக் கொள்ளல்
- அண்மைக்காலமாக கடற்றொழில் மற்றும் நீரகவளமூல திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இந்த திணைக்களத்திடமுள்ள வளங்கள் போதுமானதாக இல்லாமை அதன் பணிகளுக்கு பிரதிகூலமான விதத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதோடு, கடந்த காலத்தில் கடற்றொழில் துறையில் நிகழ்ந்த துரித மற்றும் நன்மையான மாற்றங்களுக்கு அமைவாக செயலாற்றும் பொருட்டு திணைக்களத்தின் கட்டமைப்பு, தற்போதைய பதவியணி கட்டமைப்பு என்பவற்றை மாற்றவேண்டிய தேவையும் இடவசதிகளுடன் கூடிய கட்டடமொன்றின் தேவையும் எழுந்துள்ளது. அதற்காக கடற்றொழில் மற்றும் நீரகவளமூல திணைக்களத்தில் சில பிரிவுகளைத் தாபிப்பதற்காக நிருமாணிக்கப்படவுள்ள கட்டடத்தை விஸ்தரித்து சுமார் 432 சதுர மீற்றர்கள் கொண்ட இடவசதிகளுடன் நான்கு மாடி கட்டடமொன்றாக நிருமாணிப்பதற்கும் அதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை 2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளின் மூலம் பெற்றுக் கொள்வதற்குமாக கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.