• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதித் தேவைகளுடனான கலைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 5,000/- ரூபாவிலிருந்து 10,000/- ரூபா வரை அதிகரித்து வழங்குவதற்குத் தேவையான மேலதிக நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொள்ளல்
- இந்த விடயம் 2016 திசெம்பர் மாம் 06 ஆம் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதோடு, அதன் போது நிதித் தேவைகளுடனான கலைஞர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படும் 5,000/- ரூபாவை 10,000/- ரூபாவாக அதிகரிப்பதற்கும் இந்தத் தொகை வழங்கப்படும் கலைஞர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக அதிகரிப்பதற்கும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை 2017 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்துவதற்குமாக உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.