• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் ஏற்படும் திடீர் விபத்துக்களை தடுக்கும் மற்றும் முகாமிக்கும் தேசிய கொள்கையும் திறமுறைத் திட்டமும்
- இலங்கையில் நிகழும் திடீர் விபத்துகள் காரணமாக ஆண்டொன்றில் ஒரு மில்லியனுக்கும் கூடுதலானவர்கள் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படுவதோடு, சுகாதார துறைக்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதி ஏற்பாடுகளில் கணிசமான அளவு அவர்களுக்காக செலவு செய்யவேண்டி ஏற்பட்டுள்ளது. திடீர் விபத்துக்களுக்கு ஏதுவாய் அமையும் பிரதான காரணம் "வீதி விபத்துக்கள்" என இனங்காணப்பட்டுள்ளதோடு, இதன்போது மரணிப்பவர்களின் பெரும்பாலானோர் 15 வயதிற்கும் 44 வயதிற்கும் இடைப்பட்டவர்களென தெரியவந்துள்ளது. இந்த நிலைமையை தவிர்க்கும் பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ள "இலங்கையில் ஏற்படும் திடீர் விபத்துக்களை தடுக்கும் மற்றும் முகாமிக்கும் தேசிய கொள்கையும் திறமுறைத் திட்டமும்" என்பதை ஏற்பதற்கும் குறித்த தேசிய கொள்கை மற்றும் திறமுறைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தேவையான அரசியல் மற்றும் நிறுவன ரீதியிலான ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்குமாக காதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.