• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சீன மக்கள் குடியரசின் அரசாங்க வனவியல் முகாமைத்துவ நிருவாகத்துக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
- இலங்கை வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி மற்றும் கல்வி வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புர்ந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பெரும்பாலானோர்களுக்கு அவர்களுடைய அறிவை விருத்தி செய்து கொள்வதற்கும் ஆற்றலை கட்டியெழுப்புவதற்கும் சிறந்த வாய்ப்பு ஏற்படும். அத்துடன் துறைசார்ந்த உத்தியோகத்தர்களைப் பயிற்றுவித்தல் உரிய துறைகளில் உத்தியோகத்தர்களுக்கு இரு நாடுகளுக்கும் விஜயம் செய்து அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்குதல், ஒத்துழைப்பு ஆராய்ச்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் விலங்குகள் மற்றும் தாவர வகைகளின் பரிமாற்றல் என்பனவற்றுக்கு இதன் மூலம் வாய்ப்பு ஏற்படுவதோடு, இந்த உடன்படிக்கையை சீன மக்கள் குடியரசிற்கு மேற்கொள்ளவுள்ள அவருடைய உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.