• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொங்கீறிட் பம்பு டிரக்குகள் இறக்குமதியை ஒழுங்குறுத்துதல்
- நிருமாணிப்புத் துறையானது இலங்கையின் இரண்டாவது பெரிய கைத்தொழிலாவதோடு, இந்தத் துறைக்கு வசதிகளை வழங்குவதன் மூலம் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பல நலன்களை நாட்டிற்காகப் பெற்றுக் கொள்ளலாம். ஆதலால், நிருமாணிப்புகளுக்குத் தேவையான கொங்கீறிட் பம்பு டிரக்குகள் இறக்குமதிக்குரிய ஒழுங்குவிதி திருத்தப்பட்டுள்ளதோடு, இந்த இயந்திரங்களை இறக்குமதி செய்யும் போது பத்து (10) வருடங்களுக்கு குறைவானவை பத்து (10) வருடங்களுக்கு மேலானவை என கொங்கீறிட் பம்பு டிரக்குகள் சார்பில் இரண்டு புதிய வகுப்பீட்டு குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பத்து வருடங்களுக்கு மேலாக பழைமைவாய்ந்த கொங்கீறிட் பம்பு டிரக்குகள் இறக்குமதி செய்வதற்கு இறக்குதி உரிமப் பத்திரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய பொருள் அட்டவணையில் உள்வாங்கி 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட 2017‑05‑19 ஆம் திகதியிடப்பட்டதும் 2019/24 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.