• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ரமழான் உற்சவ காலத்தில் முஸ்லிம் பக்தர்களுக்கு விநியோகிப்பதற்குத் தேவையான 150 மெற்றிக் தொன் பேரீச்சம் பழம் மேலதிகமாக சதொச ஊடாக கொள்வனவு செய்தல்
- ரமழான் உற்சவ காலத்தில் இஸ்லாமிய வழிபாட்டாளர்களின் உபயோகத்திற்காக சவுதி அரேபிய அரசாங்கத்தினால் நன்கொடையாக 150 மெற்றிக் தொன் பேரீச்சம்பழம் கிடைத்திருந்த போதிலும் அது இந்த காலப்பகுதிக்குள் இஸ்லாமிய வழிபாட்டாளர்களின் நுகர்வுக்கு போதுமானதாக இல்லையென மதிப்பிடப் பட்டுள்ளது. ஆதலால், தற்போது நன்கொடையாகக் கிடைக்கப் பெற்றுள்ள பேரீச்சம்பழம் தொகையைவிட மேலும் 150 மெற்றிக் தொன் பேரீச்சம்பழம் மேலதிகமாக சதொச நிறுவனத்தினால் கொள்வனவு செய்து அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இஸ்லாமிய வழிபாட்டாளர்களுக்கு விநியோகிக்கும் பொருட்டு அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.