2017-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வ வீட்டு வசதிகளை வழங்குதல் - கொழும்பு மாவட்டம் - கொழும்பு மாவட்டத்தினுள் அரசாங்க நிறுவனங்கள் பெருமளவு தாபிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் சேவைபுரியும் கணிசமானவளவு உத்தியோகத்தர்கள் கொழும்பு மாவட்டத்திற்கு வௌியே வசிப்பவர்களானதால் அவர்கள் உத்தியோகபூர்வ வீடுகளை எதிர்பார்க்கின்றனர். தற்போது பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சுக்குச் சொந்தமான அரசாங்க உத்தியோகபூர்வ வீடுகளிலிருந்து குறிப்பிட்டளவு அரசாங்க சேவையின் நிறைவேற்று உத்தியோகத்தர்களுக்கும் சேவையின் தேவைக்கமைய பிற உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டிருந்த போதிலும் அமைச்சுக்களின் செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் போன்ற உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வ வீடுகளை வழங்கும் போது அத்தகைய வீடுகளுக்காக நிலவும் பற்றாக்குறை பிரச்சினையாகக் காணப்படுகின்றது. இதற்கு மாற்றுவழியாக பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சுக்குச் சொந்தமான கொழும்பு 07, ஹெக்டர் கொப்பேகடு மாவத்தையிலுள்ள இதற்கு முன்னர் காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் நடாத்திச் செல்லப்பட்ட காணியில் 0.284 ஹெக்டர்யார் விஸ்தீரணமுடைய காணித் துண்டில் 08 மாடிகள் கொண்ட 49 உத்தியோகபூர்வ வீடுகளை நிருமாணிக்கும் கருத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளதோடு, இது இந்த ஆண்டில் ஆரம்பித்து 2019 ஆம் ஆண்டின் இறுதியில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. உரிய இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை 2017 - 2019 காலப் பகுதிக்குள் பொது திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்குமாக பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |