2017-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பன்னிபிட்டிய, வீரமாவத்தையில் தொழில்சார்பாளர்களுக்கான 500 வீடுகளை வடிவமைத்து நிருமாணிக்கும் அடிப்படையில் நிருமாணிக்கும் பொருட்டு ஒப்பந்தத்தை வழங்குதல் - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் பன்னிபிட்டிய, வீரமாவத்தையில் தொழில் சார்பாளர்களுக்கான 500 வீடுகளை நிருமாணிக்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்படும் வீட்டுப் பயனாளிகளிடமிருந்து வீட்டுக்கான பெறுமதியை முன்னதாகவே பெற்றுக் கொண்டு அதன் மூலம் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவின் சிபாரிசின் பிரகாரமும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரமும் உரிய ஒப்பந்தத்தை வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |