2017-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பதுளை - செங்கலடி வீதி மேம்பாட்டு கருத்திட்டத்தின் கீழ் லுணுகலயி லிருந்து பிபில வரையிலான (171.80 கிலோ மீற்றரிலிருந்து 190.80 கிலோ மீற்றர் வரை) வீதிப் பகுதியை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல் - பதுளை - செங்கலடி வீதி மேம்பாட்டு கருத்திட்டத்தின் கீழ் லுணுகலயிலிருந்து பிபில வரையிலான வீதிப் பகுதியை நிருமாணிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு ஒப்பந்தத்தை வழங்குவதற்காக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |