2017-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
1924 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க வௌ்ளப்பெருக்கு பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை இரத்துச் செய்து புதிய வௌ்ளப்பெருக்கு முகாமைத்துவ சட்டமொன்றை உருவாக்குதல் - வௌ்ளத்தினால் பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்களை வௌிப்படுத்துவதற்கு 1924 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க வௌ்ளப்பெருக்கு பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் மூலம் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ள தோடு, இந்த பிரதேசங்களை பாதுகாக்கும் பொருட்டுத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் நீர்ப்பாசன பணிப்பாளர் அதிபதிக்குக் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஒரு தடவை மாத்திரம் சிறிய திருத்தத்திற்கு உள்ளானதோடு கடந்த காலப்பகுதியில் நிகழ்ந்துள்ள சமூக, பொருளாதார, சுற்றாடல், காலநிலை மற்றும் நிறுவனரீதியிலான மாற்றங்களைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, நடைமுறை மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு பொருத்தமானவாறு ஆறுகள் உட்பட நீர்தேக்கங்களினால் உருவாகக்கூடிய வௌ்ள அனர்த்தம் அதேபோன்று மழைநீர் ஒன்றுசேர்வதனால் ஏற்படும் நகர மற்றும் பிரதேச அனர்த்தங்கள் உட்பட வேறு விதத்திலான வௌ்ளப்பெருக்கு போன்றவற்றினால் நிகழும் அனர்த்தங்களினால் உயிர், உடைமைகள், சுற்றாடல் மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய சேதங்கள் மற்றும் அனர்த்தங்களைக் குறைப்பதற்கு இயலுமாகும் வகையில் ஏற்பாடுகளைக் கொண்ட வௌ்ளப் பாதுகாப்புச் சட்டமொன்றை ஆக்கும் தேவை எழுந்துள்ளது. இதற்கமைவாக, 1924 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க வௌ்ளப்பெருக்கு பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை இரத்துச் செய்து புதிய சட்டமூலமொன்றை வரையும் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |