• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை கமத்தொழில் ஆராய்ச்சிக் கொள்கை சபையுடனும் மலேசியாவின் கமத்தொழில் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்துடனும் தேசிய கமத்தொழில் ஆராய்ச்சி முறைமையில் கமத்தொழில் விஞ்ஞானிகளின் மனிதவளங்கள் அபிவிருத்தி தொடர்பில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை
- 2016 ஆம் ஆண்டில் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் மலேசியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கையின் கமத்தொழில் ஆராய்ச்சிக் கொள்கை சபையுடனும் மலேசியாவின் கமத்தொழில் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்துடனும் தேசிய கமத்தொழில் ஆராய்ச்சி முறைமையில் கமத்தொழில் விஞ்ஞானிகளின் மனிதவளங்கள் அபிவிருத்தி தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் இரு தரப்பினர்களுக்கும் இடையில் தொழினுட்ப ஒத்துழைப்பினை மேம்படுத்திக் கொள்வதற்கும் பட்டப்பின்படிப்புடனான விஞ்ஞானிகளை உருவாக்கிக் கொள்வதற்கும் வாய்ப்புக் கிடைக்கும். உடன்பாடு காணப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை பொது திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் உரிய புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட்டமை சார்பில் கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் தழுவு அங்கீகாரம் வழங்கப்பட்டது.