2017-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கைத்தொழில்களை அமைப்பதற்காக பிராந்திய கைத்தொழிற் பேட்டைகளி லிருந்து காணித் துண்டுகளை ஒதுக்கீடு செய்தல் - புத்தள, நாலந்த (மாத்தளை), நாலந்த எல்லாவல, கலிகமுவ, களுத்துறை, மில்லவ, மினுவங்கொட, மத்துகம, தம்பதெனிய, நூரான, மாகந்துர (மேற்கு), தங்கொட்டுவ, உடுகாவ, திருகோணமலை ஆகிய கைத்தொழில் பேட்டைகளிலுள்ள 23 காணித் துண்டுகளை சுமார் 1,617 பில்லியன் ரூபாவை முதலீடு செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பிரதான விலைமதிப்பீட்டாளரினால் தீர்மானிக்கப்படும் குத்தகை தொகையை அறவிட்டுக் கொள்ளும் அடிப்படையில் 35 வருட காலத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |