2017-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து 200 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட கடன் வசதியொன்றைப் பெற்றுக் கொள்ளல் - இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமை அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக 200 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட கடன் வசதியொன்றை வழங்குவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. வீடமைப்பு, கால்நடை விருத்திக்குத் தேவையான பிராணிகளின் இறக்குமதி, கமத்தொழில், பால் உற்பத்திக்குத் தேவையான இயந்திரசாதனங்களின் இறக்குமதி, கைத்தொழில் தொழினுட்ப நிறுவனத்தின் அபிவிருத்தி போன்ற பணிகளுக்காக இந்த கடன்வசதி பயன்படுத்தப்படும். இதற்கமைவாக, பாகிஸ்தான் அரசாங்கத்துடன் இதற்குரிய கடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |