2017-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உயர் கல்வி தரநிலை காப்பு நிறுவனங்களுக்கான சருவதேச வலையமைப்பின் அடுத்த மாநாட்டை 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்துதல் - உயர் கல்வி துறையின் தரநிலை காப்பு சார்பில் முனைப்புடன் செயலாற்றும் 200 இற்கும் மேற்பட்ட அமைப்புகளின் கூட்டானது "உயர் கல்வி தரநிலை காப்பு நிறுவனங்களுக்கான சருவதேச வலையமைப்பினை" தாபித்துக் கொண்டுள்ளன. இதன் உறுப்பினர்களினால் இணங்கியொழுகப்பட்டுள்ள மிகப் பயனுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடி அனுபவங்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் இரண்டு (02) ஆண்டுகளுக்கு ஒருதடவை இந்த வலையமைப்பின் மாநாடானது நடாத்தப்படுகின்றது. உள்நாட்டவர்கள் மற்றும் வௌிநாட்டவர்கள் சுமார் 1,000 பேர்கள் கலந்துகொள்ளவுள்ள இந்த வலையமைப்பின் அடுத்த மாநாட்டை 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்தும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |