2017-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான புகையிரத ஒதுக்கு காணிகளை பயன்படுத்துபவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய நிலுவை குத்தகையை அறிவிட்டுக் கொள்ளல் - புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளிலிருந்து ஏற்கனவே சுமார் 1,934 ஏக்கர்கள் 6,400 குத்தகைக்காரர்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப் பட்டிருந்த போதிலும் இவர்களுள் பெரும்பாலானோர் திணைக்களத்திற் குரிய குத்தகைத் தொகையை செலுத்துவதில்லை. சுமார் 1,468 மில்லியன் ரூபா நிலுவைக் குத்தகை தொகையானது அறவிடப்பட வேண்டியுள்ளது. 2016 மே மாதம் 10 ஆம் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளை பத்து (10) வருடங்களுக்கு மேலாக உபயோகப்படுத்துபவர்களுக்கு அரசாங்க மதிப்பீட்டின் மீது ஐந்து (05) வருடங்களைக் கொண்ட உச்சக் காலப்பகுதிக்குள் இந்தக் காணிகளை முறையாக குத்தகைக்களிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இவ்வாறு முறையான விதத்தில் காணிகளை குத்தகைக் களிக்கும் போது உரிய காணிகளை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய நிலுவைத் தொகையை அறவிடுவதற்கு முறையான சலுகை வழிமுறை யொன்றை அறிமுகப்படுத்தும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |