2017-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையில் வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைக்கும் உடன்படிக்கை - மாண்புமிகு பிரதம அமைச்சர் கடந்த ஆண்டு சீனாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ சுற்றுலாவின் போது நீதிமன்றமொன்றில் குற்றவாளிகளாக காணப்படும் ஆட்களை பரஸ்பரம் நாடுகடத்துவற்கு (வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைத்தல்) உரியதாக இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதாக பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |